என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜன் கி பாத் முக்கியம்... மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி
Byமாலை மலர்25 April 2021 7:38 AM GMT (Updated: 25 April 2021 7:38 AM GMT)
காங்கிரஸ் கட்சியினர் அனைத்து அரசியல் பணிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் வழங்கும்படி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா வைரசின் கோரப்பிடி நாளுக்கு நாள் இறுகி வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டையே உலுக்கியிருப்பதாகவும், மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து சக்தியுடனும் செயல்படுவதாகவும் கூறினார்.
இந்நிலையில், பிரதமரின் மன் கி பாத் உரை மற்றும் கொரோனா விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, ‘ஜன் கி பாத்’ (மக்களின் குரல்) முக்கியம். இந்த நெருக்கடியான சமயத்தில், நாட்டிற்கு பொறுப்பான குடிமக்கள் தேவை. எனது காங்கிரஸ் நண்பர்கள் அனைத்து அரசியல் பணிகளையும் விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் வழங்கி, நம் நாட்டு மக்களின் வலியைக் குறைக்க வேண்டும்” என கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X