search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    மோசமான சூழலை எதிர்கொள்ள முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் -மத்திய அரசு

    வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தனியார் நிறுவனங்கள் தொடுத்த வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு கூறியதாவது:

    வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும். அனைத்து மாநில அரசுகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும். மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை. இதுதான் நிதர்சனம்.  மோசமான சூழலை எதிர்கொள்ள முழு அளவில் தயாராக இருக்க வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு மத்திய அரசு தெரிவித்தது.
    Next Story
    ×