search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணிடம் பணம் அபேஸ்
    X
    பெண்ணிடம் பணம் அபேஸ்

    பிறந்தநாள் பரிசு அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.4 கோடி அபேஸ்

    பிறந்தநாள் பரிசாக விலையுயர்ந்த செல்போன் அனுப்புவதாக கூறி ரூ.3 கோடியே 98 லட்சம் அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புனே :

    புனேயை சேர்ந்த 55 வயதுயுடைய பெண் ஒருவருக்கு சமீபத்தில் பேஸ்புக்கில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னை நண்பராக சேர்க்கும்படி தெரிவித்து இருந்தார். இதனை கண்ட அப்பெண் அந்த நபரை நண்பராக சேர்த்து கொண்டு அடிக்கடி சாட்டிங் செய்து வந்தனர். நாளடைவில் செல்போனிலும் பேசி வந்தனர்.

    இந்தநிலையில் அப்பெண்ணிற்கு அண்மையில் பிறந்தநாள் வந்தது. இது பற்றி அறிந்த அந்த ஆசாமி பிறந்தநாள் பரிசாக விலையுயர்ந்த செல்போன் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார். சில நாள் கழித்து அப்பெண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்தது.

    இதில் பேசிய நபர் டெல்லி சுங்கவரித்துறையில் இருந்து பேசுவதாகவும், பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும், இதில் விலையுயர்ந்த பரிசு பொருட்கள் இருப்பதால் சேவை கட்டணமாக பணத்தை அனுப்பி வைக்கும்படி தெரிவித்து உள்ளார். இதனை நம்பிய அப்பெண் அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.3 கோடியே 98 லட்சம் அனுப்பி உள்ளார்.

    இதன்பின்னர் எந்த பார்சலும் வரவில்லை. கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அப்பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை அபேஸ் செய்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×