என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேச துணை முதல்-மந்திரிக்கு கொரோனா - மனைவிக்கும் தொற்று உறுதி
Byமாலை மலர்22 April 2021 11:10 PM GMT (Updated: 22 April 2021 11:10 PM GMT)
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மக்களை புரட்டியெடுத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தொற்றுக்கு ஆளாவதும், ஆயிரக்கணக்கானோர் மாண்டு போவதும் தினசரி நிகழ்வாக மாறி விட்டது.
லக்னோ:
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மக்களை புரட்டியெடுத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தொற்றுக்கு ஆளாவதும், ஆயிரக்கணக்கானோர் மாண்டு போவதும் தினசரி நிகழ்வாக மாறி விட்டது.
இந்த கொடூர தொற்றுக்கு அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பல்வேறு பிரபலங்களும் ஆளாகி வருகின்றனர். அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மாவுக்கு (வயது 57) நேற்று முன்தினம் இரவு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவை சேர்ந்த தினேஷ் சர்மா இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில், ‘எனக்கும், எனது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி ஆதித்யநாத், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள் ஏற்கனவே தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மக்களை புரட்டியெடுத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தொற்றுக்கு ஆளாவதும், ஆயிரக்கணக்கானோர் மாண்டு போவதும் தினசரி நிகழ்வாக மாறி விட்டது.
இந்த கொடூர தொற்றுக்கு அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பல்வேறு பிரபலங்களும் ஆளாகி வருகின்றனர். அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மாவுக்கு (வயது 57) நேற்று முன்தினம் இரவு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவை சேர்ந்த தினேஷ் சர்மா இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில், ‘எனக்கும், எனது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி ஆதித்யநாத், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள் ஏற்கனவே தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X