search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனா பரவல் எதிரொலி - உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

    அதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலியாக, பிரதமர் மோடி இன்று ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா தொற்று பரவலானது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன.

    இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவுக்கும், மக்களுக்குமான இடைவெளியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    கொரோனா வைரஸ்

    இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலியாக, பிரதமர் மோடி இன்று உயர்மட்டக் குழுவினருடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    முன்னதாக, கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
     
    இந்த ஆலோசனைக்கூட்டதில் கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×