என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காள தேர்தல் -11.30 மணி வரை 37 சதவீத வாக்குப்பதிவு
Byமாலை மலர்22 April 2021 6:14 AM GMT (Updated: 22 April 2021 6:14 AM GMT)
306 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 6ம் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்துவருகின்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் இன்று 6-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 306 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்துவருகின்றனர்.
காலை 9.30 மணி நிலவரப்படி 17 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 11.30 மணி நிலவரப்படி 37.27 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரிப்பதால் அடுத்தகட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும்படி திரிணாமுல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால், அதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X