என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் தடுப்பூசி முகாமில் குவிந்த பொதுமக்கள் - டோக்கன் விநியோகத்தின் போது தள்ளுமுள்ளு
Byமாலை மலர்21 April 2021 2:45 PM GMT (Updated: 21 April 2021 2:45 PM GMT)
கேரளாவில் கோட்டயம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில், அதிகாலை 6 மணியில் இருந்தே நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூடினர்.
கோட்டயம்:
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோட்டயம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில், அதிகாலை 6 மணியில் இருந்தே நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூடினர். மாநிலத்தில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த முகாமில் தினந்தோறும் ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதனை ஒருங்கிணைக்கும் வகையில் டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சுகாதாரத் துறையினரால் முகாமில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கிய போது, வரிசையில் நிற்காதவர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்து சென்றனர். இதனால், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X