search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ஜார்கண்டில் ஏப்.22 முதல் முழு ஊரடங்கு- அரசு அறிவிப்பு

    ஜார்கண்டில் ஏப்ரல் 22 முதல் 29 வரை சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, மகாராஷ்டிரா, புதுடெல்லி மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

    இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஏப்ரல் 22 முதல் 29 வரை முழு ஊரடங்கு விதித்து மாநில அரசு அறிவித்துள்ளது

    இது குறித்து மாநில அரசு தெரிவித்துள்ளதாவது,

    மாநிலம் முழுவதும் ஏப்ரல் 22 முதல் 29 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள், சுரங்க, விவசாய மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    வழிபாட்டு தலங்கள் திறந்த நிலையில் இருக்கும், ஆனால் பக்தர்கள் கூட்டமாக வருவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×