என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அறிகுறி எதுவும் இல்லாமல் கர்நாடகா விடுதியில் 30 குழந்தைகளுக்கு கொரோனா
பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் துமகூருவில் உள்ள சித்தங்கா மடத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது.
இந்த விடுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுமார் 30 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
ஆனால் அந்த குழந்தைகளுக்கு அறிகுறி எதுவும் இல்லை என்றும், அதனால் அவர்களை மட்டும் அங்குள்ள விடுதியில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அங்குள்ள 2 ஆயிரம் குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சித்தகங்கா மடாதிபதி நிருபர்களிடம் கூறுகையில், "கொரோனாவுக்கு குழந்தைகளும், இளைஞர்களும் உயிரிழப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அனைவரும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு மட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் உள்ளது. அவரவர்கள் அரசின் வழிகாட்டுதலை தீவிரமாக பின்பற்றி உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்