என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் போடப்பட்டு உள்ள மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12.38 கோடி
Byமாலை மலர்19 April 2021 10:07 PM GMT (Updated: 19 April 2021 10:07 PM GMT)
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு வகையான பயனாளர்களை அடையாளம் கண்டறிந்து இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு வகையான பயனாளர்களை அடையாளம் கண்டறிந்து இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அதிவேகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-வது அலை நாட்டில் வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை மத்திய-மாநில அரசுகள் மேலும் அதிகரித்து இருக்கின்றன.
இதன் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் மட்டும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.
அதாவது 12 லட்சத்து 30 ஆயிரத்து 7 டோஸ் தடுப்பூசி வெறும் 24 மணி நேரத்தில் போடப்பட்டு இருக்கிறது. விடுமுறை தினமாக இருந்தபோதும் இவ்வளவு அதிக டோஸ்கள் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 9 லட்சத்து 40 ஆயிரத்து 725 பயனாளர்கள் முதல் டோசும், 2 லட்சத்து 89 ஆயிரத்து 282 பயனாளர்கள் 2-வது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த 12.30 லட்சம் டோஸ்களையும் சேர்த்து, இந்தியாவில் போடப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12.38 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு வகையான பயனாளர்களை அடையாளம் கண்டறிந்து இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அதிவேகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-வது அலை நாட்டில் வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை மத்திய-மாநில அரசுகள் மேலும் அதிகரித்து இருக்கின்றன.
இதன் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் மட்டும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.
அதாவது 12 லட்சத்து 30 ஆயிரத்து 7 டோஸ் தடுப்பூசி வெறும் 24 மணி நேரத்தில் போடப்பட்டு இருக்கிறது. விடுமுறை தினமாக இருந்தபோதும் இவ்வளவு அதிக டோஸ்கள் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 9 லட்சத்து 40 ஆயிரத்து 725 பயனாளர்கள் முதல் டோசும், 2 லட்சத்து 89 ஆயிரத்து 282 பயனாளர்கள் 2-வது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த 12.30 லட்சம் டோஸ்களையும் சேர்த்து, இந்தியாவில் போடப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12.38 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X