என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு எதிரான போரில் மிக பெரிய ஆயுதம் தடுப்பூசி - பிரதமர் மோடி
Byமாலை மலர்19 April 2021 9:20 PM GMT (Updated: 19 April 2021 9:20 PM GMT)
உலக அளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா நீடிக்கிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த சில தினங்களாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு புதிய உச்சமடைந்து வருகின்றன.
இதற்கிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 15-ம் தேதி முதன்முறையாக 2 லட்சத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு கூடுதலாக தொற்று உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் கொரோனா கட்டுப்பாடுகளும் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி டாக்டர்களுடன் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், நாட்டிலுள்ள முன்னணி மருந்து நிறுவனங்களுடன் மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வழியே கலந்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டுக்கு விலைமதிப்பில்லா சேவை செய்து வரும் மருத்துவர்கள், மருத்துவ மற்றும் துணை மருத்துவ பணியாளர்களுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் 2வது கொரோனா அலை வீசி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் மிக பெரிய ஆயுதம் தடுப்பூசி. அதனால், அதிக அளவிலான நோயாளிகளை தடுப்பூசி போட்டு கொள்ளும்படி ஊக்கப்படுத்த வேண்டும்.
கொரோனாவின் புதிய அலை டையர் 2 மற்றும் டையர் 3 ஆகிய நகர பகுதிகளில் விரைவாக பரவி வருகிறது. அந்தப் பகுதிகளில் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் மற்றும் அதற்கான வளங்களை மேம்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்.
கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு விவரங்கள் பற்றிய பல்வேறு வதந்திகளுக்கு எதிராக மக்களுக்கு அதுபற்றிய கல்வியை ஊட்ட வேண்டும். மக்கள் அச்சத்திற்கு இரையாகக் கூடாது என்பது மிக முக்கியம்.
இதற்கு முறையான சிகிச்சையோடு கூட, சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவதும் அவசியம். நெருக்கடியான நிலை இல்லாத சூழலில் பிற நோய்களுக்கான சிகிச்சைக்காக தொலைதூர மருத்துவ முறையையும் பின்பற்றுங்கள் என தெரிவித்தார்.
இந்த உரையாடலில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் எதிர்கொண்டு வரும் விஷயங்களை டாக்டர்கள் பகிர்ந்து கொண்டனர். சுகாதார நல உட்கட்டமைப்புகளை எப்படி மேம்படுத்தி வருகிறோம் என்பது பற்றியும் அவர்கள் பேசினர். இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பில்லாத நோயாளிகளுக்கான சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது பற்றியும் அவர்கள் வலியுறுத்தி பேசினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X