என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசின் வீணான பேச்சுவார்த்தைகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து -ராகுல் தாக்கு
Byமாலை மலர்19 April 2021 11:19 AM GMT (Updated: 19 April 2021 11:19 AM GMT)
நரேந்திர மோடி அரசு இந்தியாவின் நலன்களை சீனாவிடம் சரண்டர் செய்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
புதுடெல்லி:
லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில், படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படைகளை விலக்கிக் கொள்வது குறித்து சீனா-இந்தியா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
கடைசியாக, 9ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் படைகளை, வாகனங்களை பின்வாங்கச் செய்ய சீன ராணுவ அதிகாரிகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை சுட்டிக் காட்டி, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது. நரேந்திர மோடி அரசு இந்தியாவின் நலன்களை சீனாவிடம் சரண்டர் செய்துவிட்டதாகவும், தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி, தனது டுவிட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். அதில், ‘கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் தெப்சாங் சமவெளிகளில் சீன ஆக்கிரமிப்பானது, டிபிஓ ராணுவ தளம் உள்ளிட்ட இந்தியாவின் நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தலாகும். மத்திய அரசின் வீணான பேச்சுவார்த்தைகளால் தேசிய பாதுகாப்பு பெருமளவில் ஆபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது’ என கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X