என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் கையில் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்: எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
Byமாலை மலர்19 April 2021 1:47 AM GMT (Updated: 19 April 2021 1:47 AM GMT)
புல்தானா சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்து உள்ளார்.
மும்பை :
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் 2-வது கொரோனா அலை உருவாக மத்திய அரசு, தேர்தல் ஆணையமே காரணம் என சிவசேனா குற்றம் சாட்டி இருந்தது. இந்தநிலையில் புல்தானா சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
அரசியல் செய்ய இது தான் நேரமா?. இதுபோன்ற துயரங்களில் அரசியல் செய்ய பிரதமர் மோடியும், தேவேந்திர பட்னாவிசும் வெட்கப்பட வேண்டும். தேவேந்திர பட்னாவிஸ் மராட்டிய முதல்-மந்திரியாக இருந்தால், மோடி இப்படி செய்வாரா?.
எங்கள் அரசு தோல்வி அடைந்ததாக காட்ட முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மந்திரிகளும் கடுமையாக உழைத்து வரும் போது, எதிர்க்கட்சியினர் உதவி செய்வதைவிட்டுவிட்டு எங்களது முயற்சிகளை கெடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஒருவேளை எனது கையில் கொரோனா வைரஸ் கிடைத்தால், அதை தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன். அந்த அளவுக்கு நான் அவரை வெறுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் 2-வது கொரோனா அலை உருவாக மத்திய அரசு, தேர்தல் ஆணையமே காரணம் என சிவசேனா குற்றம் சாட்டி இருந்தது. இந்தநிலையில் புல்தானா சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
அரசியல் செய்ய இது தான் நேரமா?. இதுபோன்ற துயரங்களில் அரசியல் செய்ய பிரதமர் மோடியும், தேவேந்திர பட்னாவிசும் வெட்கப்பட வேண்டும். தேவேந்திர பட்னாவிஸ் மராட்டிய முதல்-மந்திரியாக இருந்தால், மோடி இப்படி செய்வாரா?.
எங்கள் அரசு தோல்வி அடைந்ததாக காட்ட முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மந்திரிகளும் கடுமையாக உழைத்து வரும் போது, எதிர்க்கட்சியினர் உதவி செய்வதைவிட்டுவிட்டு எங்களது முயற்சிகளை கெடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஒருவேளை எனது கையில் கொரோனா வைரஸ் கிடைத்தால், அதை தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன். அந்த அளவுக்கு நான் அவரை வெறுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X