என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொரோனா பரவல் அதிகரிப்பு- ராகுல் காந்தியின் மேற்குவங்காள தேர்தல் பிரசாரம் ரத்து
புதுடெல்லி:
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 180 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் முடிந்துவிட்டது.
6-வது கட்டமாக 22-ந் தேதியும், 7-வது கட்டமாக 26-ந் தேதியும், கடைசி கட்டமாக 29-ந் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் எஞ்சிய கட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதாக இருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது பொதுக் கூட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், அவர் மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்வதை ரத்து செய்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 6,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறித்து கண்காணிப்பதற்காக அந்த மாநிலத்தில் சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்