என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சத்தீஷ்கர் மருத்துவமனை தீ விபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு
ராய்ப்பூர்:
சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகள் பலர் சிக்கி கொண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இதில் 29 நோயாளிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களை மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் தீக்காயம் அடைந்து பலியானார். மற்றவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தனர்.
ஆஸ்பத்திரியில் எரிந்த தீயை கடும் போராட்டத்திக்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அஜய்யாதவ் கூறும்போது, தீ பிடித்த போது தீயணைக்கும் கருவிகளை ஏன் பயன்படுத்தவில்லை என்பது குறித்து விசாரணை நடத்துவோம்.
சம்பந்தபட்டவர்கள் மீது அலட்சியமாக இருந்தாக வழக்குபதிவு செய்யப்படும் என்றார். பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியை முதல்வர் பூபேஷ்பாகேல் அறிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்