என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா... ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு
Byமாலை மலர்18 April 2021 5:49 AM GMT (Updated: 18 April 2021 5:49 AM GMT)
ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறி உள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வும் (மெயின் தேர்வு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறவிருந்த நிலையில், தற்போதையை சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறி உள்ளது. தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி பதிவாகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.61 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X