search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.61 லட்சமாக உயர்ந்தது

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 18,01,316 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  1,47,88,109 உயர்ந்துள்ளது. 

    புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,501 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.

    தடுப்பூசி போடும் பணி

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,28,09,643 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,38,423 பேர் குணமடைந்துள்ளனர்.

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 18,01,316 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    நாடு முழுவதும் நேற்று வரை 12,26,22,590 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×