என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
Byமாலை மலர்17 April 2021 2:50 AM GMT (Updated: 17 April 2021 2:50 AM GMT)
மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா:
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5-ம் கட்ட தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல் காரணமாக முக்கிய பிரமுகர்களின் பிரசாரத்திற்கு தடை விதிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. நடந்து முடிந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது சிட்டால்குச்சியில் வன்முறை ஏற்பட்டதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன், மற்றொரு வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதனால், 5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி அங்கு 5ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் அனைத்தும் புதன்கிழமை மாலையுடன் முடிவடைந்தது.
மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசார நேரம் இரவு 7 மணியாக குறைக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரவு 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை எந்த பிரசாரமும் மேற்கொள்ள அனுமதி இல்லை எனவும், வாக்குப்பதிவுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பே பிரசாரங்களை முடித்து கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து 6-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதியும், கடைசியாக 8-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 45 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. மேற்குவங்காளத்தில் தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுவதால் பாதுக்காப்பு காரணங்களுக்காக தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5-ம் கட்ட தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
5-ம் கட்ட தேர்தலுக்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு கொரோனா கட்டுப்பாடுகளுடன் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும்.
இதில், டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல் காரணமாக முக்கிய பிரமுகர்களின் பிரசாரத்திற்கு தடை விதிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. நடந்து முடிந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது சிட்டால்குச்சியில் வன்முறை ஏற்பட்டதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன், மற்றொரு வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதனால், 5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி அங்கு 5ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் அனைத்தும் புதன்கிழமை மாலையுடன் முடிவடைந்தது.
மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசார நேரம் இரவு 7 மணியாக குறைக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரவு 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை எந்த பிரசாரமும் மேற்கொள்ள அனுமதி இல்லை எனவும், வாக்குப்பதிவுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பே பிரசாரங்களை முடித்து கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து 6-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதியும், கடைசியாக 8-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 45 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. மேற்குவங்காளத்தில் தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுவதால் பாதுக்காப்பு காரணங்களுக்காக தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X