என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எந்த மாநிலமும் ரெயில் சேவையை நிறுத்த சொல்லவில்லை - ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்16 April 2021 10:26 PM GMT (Updated: 16 April 2021 10:26 PM GMT)
எந்த மாநிலமும் ரெயில் சேவையை நிறுத்துமாறு கூறவில்லை என ரெயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ரெயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஐ.ஆர்.சி.டி.சி.யின் டிக்கெட் இணைய தளத்தில் கொரோனா கால நெறிமுறைகள் மாநிலங்களால் பின்பற்றப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்கிறபோது தேவைப்பட்டால் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ளலாம் அல்லது கொரோனா இல்லை என காட்டும் சான்றிதழ்களை பயணத்தின்போது எடுத்துச்செல்லலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தற்போது எந்த மாநில அரசும் ரெயில் சேவையை நிறுத்துமாறு கூறவில்லை. இருந்தாலும், கவலை எழுகிறபோது, மாநில அரசுகள் பிரச்சினைகள் குறித்து எங்களோடு விவாதித்துள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் கொரோனா பரிசோதனைகள் நடத்துகிறார்கள். இ-டிக்கெட் இணையதளத்தில், பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா, கொரோனா இல்லை என காட்டும் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டுமா என்பது குறித்த தகவல்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
பயணிகளுக்கு வெப்ப பரிசோதனையை ரெயில்வே நடத்துகிறது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சிராமிக் சிறப்பு ரெயில்கள் (இடம்பெயர்ந்தோர், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு) விடுவதற்கு வாய்ப்பு இல்லை. தேவை ஏற்பட்டு, கோரிக்கை விடுக்கப்பட்டால் மட்டுமே இயக்கப்படும்.
ரெயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவே பல ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் (பிளாட்பார கட்டணம்) உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 4 ஆயிரம் தனிமைப்படுத்தும் பெட்டிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பாரில் இருந்து 100-க்கும் அதிகமான பெட்டிகள் கேட்டு கோரிக்கை வந்துள்ளது. 20 தனிமைப்படுத்தும் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது ரெயில்வே தினமும் 1,490 மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களையும், 5,397 புறநகர் ரெயில்களையும் இயக்குகிறது. நாடு முழுவதும் மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்கு ஏதுவாக 140 கூடுதல் ரெயில்களையும் இயக்குகிறது. இந்த மாதமும், அடுத்த மாதமும் 140 ரெயில்கள், 483 சேவைகளை வழங்குகின்றன என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X