search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

    ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பும் இடங்கள் 24 மணி நேரமும் செயல்பட பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,91,917 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இறப்பதாக வந்த புகாரையடுத்து, நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    அனைத்து ஆக்சிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

    ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பும் இடங்கள் 24 மணி நேரமும் செயல்பட பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.
    Next Story
    ×