என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தர பிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு
Byமாலை மலர்16 April 2021 4:06 AM GMT (Updated: 16 April 2021 4:06 AM GMT)
உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் மே 15ம் தேதிவரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் மே 15ம் தேதிவரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்தது. மேலும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 20ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறுகையில், ‘மே முதல் வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளோம். அப்போது, பொதுத்தேர்வுகளை நிறுத்தி வைப்பதா அல்லது பிற வழிகளை ஆராய வேண்டுமா? என்பதுபற்றி முடிவு செய்யப்படும். பல்கலைக்கழக தேர்வுகளும் மே 15ம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன’ என்றார்.
உத்தரபிரதேசத்தில் இதுரை 6.22 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.11 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X