search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர் கோவில்
    X
    ராமர் கோவில்

    ராமர் கோவிலுக்கு நன்கொடையாக திரட்டப்பட்ட 15 ஆயிரம் காசோலைகள் திரும்பி வந்தன

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நன்கொடை திரட்டியது.
    அயோத்தி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நன்கொடை திரட்டியது.

    அப்படி திரட்டப்பட்ட 15 ஆயிரம் வங்கி காசோலைகள் திரும்பி வந்து விட்டன. இவற்றின் முக மதிப்பு ரூ.22 கோடி ஆகும்.

    இதற்கு நன்கொடை அளித்தவர்களின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததும், சில தொழில்நுட்ப தவறுகளுமே காரணம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×