என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதா மூத்த தலைவர் ராகுல் சின்கா பிரசாரம் செய்ய தடை - தேர்தல் கமிஷன் உத்தரவு
Byமாலை மலர்14 April 2021 12:52 AM GMT (Updated: 14 April 2021 12:52 AM GMT)
ராகுல் சின்கா பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது. நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கிய தடை, நாளை பகல் 12 மணிவரை அமலில் இருக்கும்.
புதுடெல்லி:
மேற்கு வங்காள சட்டசபைக்கான 4-வது கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ந் தேதி நடந்தது. அப்போது, கூச்பெஹார் மாவட்டத்தின் சிட்டால்குச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். இதுகுறித்து பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் ராகுல் சின்கா, ‘‘மத்திய படைகள் 4 பேருக்கு பதிலாக 8 பேரை சுட்டுக்கொன்றிருக்க வேண்டும்’’ என்றார். அவரது பேச்சை தேர்தல் கமிஷன் தானாக முன்வந்து புகாராக எடுத்துக்கொண்டது.
இந்தநிலையில், ராகுல் சின்கா பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது. நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கிய தடை, நாளை பகல் 12 மணிவரை அமலில் இருக்கும்.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் கூறியிருப்பதாவது:-
ராகுல் சின்காவின் பேச்சு, மனித உயிர்களை சிறுமைப்படுத்துகிறது. ஆத்திரமூட்டும் வகையில் இருக்கிறது. மத்திய படைகளை தூண்டி சட்டம்-ஒழுங்கு சிக்கலை உருவாக்கி விடும். தேர்தல் நடத்தை விதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. ஆகவே, அவசர முக்கியத்துவம் கருதி, நோட்டீசு அனுப்பாமல் அவருக்கு தடை விதித்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கவனமாக பேசுமாறு அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
மேற்கு வங்காள சட்டசபைக்கான 4-வது கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ந் தேதி நடந்தது. அப்போது, கூச்பெஹார் மாவட்டத்தின் சிட்டால்குச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். இதுகுறித்து பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் ராகுல் சின்கா, ‘‘மத்திய படைகள் 4 பேருக்கு பதிலாக 8 பேரை சுட்டுக்கொன்றிருக்க வேண்டும்’’ என்றார். அவரது பேச்சை தேர்தல் கமிஷன் தானாக முன்வந்து புகாராக எடுத்துக்கொண்டது.
இந்தநிலையில், ராகுல் சின்கா பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது. நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கிய தடை, நாளை பகல் 12 மணிவரை அமலில் இருக்கும்.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் கூறியிருப்பதாவது:-
ராகுல் சின்காவின் பேச்சு, மனித உயிர்களை சிறுமைப்படுத்துகிறது. ஆத்திரமூட்டும் வகையில் இருக்கிறது. மத்திய படைகளை தூண்டி சட்டம்-ஒழுங்கு சிக்கலை உருவாக்கி விடும். தேர்தல் நடத்தை விதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. ஆகவே, அவசர முக்கியத்துவம் கருதி, நோட்டீசு அனுப்பாமல் அவருக்கு தடை விதித்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கவனமாக பேசுமாறு அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X