search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    டெல்லியில் இன்று 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

    தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 13,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது.

    டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 13,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,50,156 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,436 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 7,972 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,95,210 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லி முழுவதும் தற்போது 43,510 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×