search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உ.பி.யில் உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,021 பேருக்கு கொரோனா பாதிப்பு

    உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 95,980 ஆக உயர்ந்துள்ளது.
    உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் 2-வது அலையில் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் புதிதாக 18,021 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 95,980 ஆக அதிகரித்துள்ளது.

    3474 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் நிலையில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். 

    உத்தர பிரதேசத்தில் 7,23,582 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,18,293 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 9,309 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் 15,353 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    80 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், நேற்று 2.18 லட்சம் மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3.71 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    Next Story
    ×