என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இதய அறுவை சிகிச்சைக்கு பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பினார்
Byமாலை மலர்13 April 2021 12:03 AM GMT (Updated: 13 April 2021 12:03 AM GMT)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 30-ந் தேதி எய்ம்சில் இதய ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
புதுடெல்லி:
75 வயதாகும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 26-ந் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியிலும், பின்னர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 30-ந் தேதி எய்ம்சில் இதய ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3-ந் தேதி ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் மேம்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரை நன்கு ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இதய அறுவை சிகிச்சை முடிந்து நான் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பியுள்ளேன். அனைவரின் வாழ்த்துகள் மற்றும் பிராத்தனையாலும், ராணுவ, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகளின் சிறப்பான கவனிப்பாலும் நான் விரைவாக குணமடைந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி. மீண்டும் வீடு திரும்பியதில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.
75 வயதாகும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 26-ந் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியிலும், பின்னர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 30-ந் தேதி எய்ம்சில் இதய ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3-ந் தேதி ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் மேம்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரை நன்கு ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இதய அறுவை சிகிச்சை முடிந்து நான் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பியுள்ளேன். அனைவரின் வாழ்த்துகள் மற்றும் பிராத்தனையாலும், ராணுவ, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகளின் சிறப்பான கவனிப்பாலும் நான் விரைவாக குணமடைந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி. மீண்டும் வீடு திரும்பியதில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X