search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

    மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடைவிதித்துள்ளது.
    மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. பா.ஜனதாவுக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

    இருதரப்பினரும் பிரசாரத்தின்போது எல்லை மீறும் வகையில் பேசி வருகின்றனர். இந்து, முஸ்லீம் குறித்தே பிரசாரம் நகர்கிறது. இதனால் பல்வேறு புகார்கள் தேர்தல் கமிஷனுக்கு சென்ற வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இன்று இரவு 8 மணியில் இருந்து நாளை இரவு 8 மணி வரைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
    Next Story
    ×