என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்தலாம் -நிபுணர் குழு பரிந்துரை
Byமாலை மலர்12 April 2021 11:07 AM GMT (Updated: 12 April 2021 11:07 AM GMT)
வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. என்றாலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இதற்காக மேலும் 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. அதில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் ஒன்றாகும். இந்தியாவில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.
இதுதொடர்பாக கடந்த 1-ந் தேதி மத்திய நிபுணர் குழு கூடி ஆய்வு செய்தது. அதில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் மீண்டும் நிபுணர் குழு இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் விண்ணப்பத்திற்கும் ஒப்புதல் வழங்கியது.
இந்த பரிந்துரையை பரிசீலனை செய்து, மருந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) விரைவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த தடுப்பூசியையும் இரண்டு கட்டங்களாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X