search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    சுப்ரீம் கோர்ட் ஊழியர்களுக்கு கொரோனா- வீட்டில் இருந்து வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள்

    சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்கள் 44 பேருக்கு கொரோனா பரவியதால் வழக்குகளை வீடுகளில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் முடிவு செய்தனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

    டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் ஊழியர்களில் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்கள் 44 பேருக்கு கொரோனா பரவியதால் வழக்குகளை வீடுகளில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் முடிவு செய்தனர்.

    அதன் அடிப்படையில் பாதுகாப்பு கருதி இன்று (திங்கட்கிழமை) வீடுகளில் இருந்தபடியே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணை நடத்தினார்கள். காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்தனர்.

    இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்க வேண்டிய வழக்குகள் 11.30 மணிக்கு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதேபோல் காலை 11 மணி அமர்வு வழக்குகள் மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
    Next Story
    ×