search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
    X
    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

    மோடி அரசின் கொள்கைகளால் இந்தியர்களின் வாழ்வை கொரோனா அழிக்கிறது - காங்கிரஸ் சாடல்

    ஓராண்டாக கொரோனா இந்தியர்களின் வாழ்வையும், பொருளாதாரத்தையும் தொடர்ந்து அழித்து வருவதாக காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “கொரோனா மீது கட்டுப்பாடு இல்லை. போதுமான தடுப்பூசிகள் இல்லை. வேலை வாய்ப்புகள் கிடையாது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குரல்களுக்கு செவி சாய்க்கப்படுவதில்லை. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பாதுகாப்பு இல்லை. நடுத்தர வர்க்கத்தினர் மகிழ்ச்சியாக இல்லை” என சாடி உள்ளார்.

    பிரதமர் மோடி


    காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஓராண்டாக கொரோனா இந்தியர்களின் வாழ்வையும், பொருளாதாரத்தையும் தொடர்ந்து அழித்து வருகிறது. மோடி அரசின் ஆணவத்துக்கும், திறமையின்மைக்கும் நன்றி. மோடி அரசின் கொள்கைகளால் சமூத்தின் அனைத்து பிரிவுகளும் கஷ்டப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×