search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் 6,489 பேருக்கு கொரோனா

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டதில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
    மும்பை

    இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டதில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அந்த மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 6,489 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாக்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2,66,224 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 49,347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அந்த மாவட்டத்தில் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று ஒரேநாளில் 2,175 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,11,236 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாக்பூர் மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5641 ஆக அதிகரித்துள்ளது.  
    Next Story
    ×