என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஏன் விவாதிப்பதில்லை? - ராகுல் காந்தி கேள்வி
Byமாலை மலர்8 April 2021 10:49 PM GMT (Updated: 8 April 2021 11:20 PM GMT)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய-மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு போன்ற காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய-மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு போன்ற காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை 90 ரூபாய்க்கு மேல் விற்பனையாவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடல் நடத்தினார். இதை முன்வைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மத்திய அரசின் வரிவிதிப்பு காரணமாக, வாகனங்களின் எரிபொருள் டேங்கை நிரப்புவதும் ஒரு தேர்வுக்கு குறையாத சவாலாகத்தான் இருக்கிறது. அப்படியிருக்க பிரதமர் மோடி ஏன் இது குறித்து விவாதிப்பதில்லை?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
சர்வதேச சந்தையில் கடந்த 8 நாட்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், இந்தியாவில் அவற்றின் விலை குறையாதது ஏன்? எனவும் அவர் வினவியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய-மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு போன்ற காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை 90 ரூபாய்க்கு மேல் விற்பனையாவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடல் நடத்தினார். இதை முன்வைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மத்திய அரசின் வரிவிதிப்பு காரணமாக, வாகனங்களின் எரிபொருள் டேங்கை நிரப்புவதும் ஒரு தேர்வுக்கு குறையாத சவாலாகத்தான் இருக்கிறது. அப்படியிருக்க பிரதமர் மோடி ஏன் இது குறித்து விவாதிப்பதில்லை?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
சர்வதேச சந்தையில் கடந்த 8 நாட்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், இந்தியாவில் அவற்றின் விலை குறையாதது ஏன்? எனவும் அவர் வினவியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X