search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
    X
    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

    அதிகரிக்கும் கொரோனா : தேர்தல் பிரசார கூட்டங்களில் கட்டுப்பாடு தேவை - மாயாவதி வேண்டுகோள்

    கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களும், அரசும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    லக்னோ:

    நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கி இருக்கிறது. 24 மணி நேரத்தில் 1.15 லட்சத்துக்கு மேற்பட்டோர் இத்தொற்றுக்கு உள்ளான புதிய உச்சமும் நடந்திருக்கிறது.

    இந்நிலையில், கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களும், அரசும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை மத்திய, மாநில அரசுகளும், மக்களும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், சாலை பிரசார நிகழ்ச்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கவலைக்குரியது. இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×