என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் ஊரடங்கு
Byமாலை மலர்8 April 2021 12:56 AM GMT (Updated: 8 April 2021 12:56 AM GMT)
ராய்ப்பூர் மாவட்டத்தில் ஏப்.9-ந் தேதி மாலை 6 மணி முதல் ஏப்.19-ந் தேதி காலை 6 மணி வரை பல செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
ராய்ப்பூர்:
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் நாளை (9-ந் தேதி) முதல் 19-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள ராய்ப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.பாரதிதாசன், மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் முதல், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு ஏப்.9-ந் தேதி மாலை 6 மணி முதல் ஏப்.19-ந் தேதி காலை 6 மணி வரை பல செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட நாட்களில், மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மதுபானக் கடைகள், சுற்றுலா, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவை மூடியிருக்கும். அதேநேரம், மருந்தகங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ரெயில் மற்றும் விமான நிலையங்கள் வழக்கம்போல் இயங்கும். மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் நாளை (9-ந் தேதி) முதல் 19-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள ராய்ப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.பாரதிதாசன், மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் முதல், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு ஏப்.9-ந் தேதி மாலை 6 மணி முதல் ஏப்.19-ந் தேதி காலை 6 மணி வரை பல செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட நாட்களில், மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மதுபானக் கடைகள், சுற்றுலா, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவை மூடியிருக்கும். அதேநேரம், மருந்தகங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ரெயில் மற்றும் விமான நிலையங்கள் வழக்கம்போல் இயங்கும். மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X