search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பு

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 2 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6,150 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக சுகாதாரத்துறை மாநிலத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 2 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6,150 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 26 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 39 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா பாதிப்புக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தொற்றில் இருந்து நேற்று 3,487 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 762 ஆக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 351 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது.

    அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 4,266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 18 பேர், பல்லாரியில் 87 பேர், பெலகாவியில் 47 பேர், பெங்களூரு புறநகரில் 80 பேர், பீதாில் 167 பேர், சிக்பள்ளாப்பூரில் 16 பேர், சிக்கமகளூருவில் 29 பேர், சித்ரதுர்காவில் 21 பேர், தட்சிண கன்னடாவில் 89 பேர், தாவணகெரேயில் 47 பேர், தார்வாரில் 43 பேர், கதக்கில் 12 பேர், ஹாசனில் 110 பேர், கலபுரகியில் 261 பேர், குடகில் 22 பேர், கோலாரில் 56 பேர், மண்டியாவில் 102 பேர், மைசூருவில் 237 பேர், ராய்ச்சூரில் 29 பேர், ராமநகரில் 14 பேர், சிவமொக்காவில் 49 பேர், துமகூருவில் 157 பேர், உடுப்பியில் 57 பேர், உத்தரகன்னடாவில் 66 பேர், விஜயாப்புராவில் 22 பேர், யாதகிரியில் 16 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு நகரில் 26 பேர், மைசூரு, தார்வாரில் தலா 3 பேர், கலபுரகியில் 2 பேர், பல்லாரி, பெங்களூரு புறநகர், பீதர், கோலார், மண்டியாவில் தலா ஒருவர் என மொத்தம் 39 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த விரைவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×