search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை கடற்கரை
    X
    மும்பை கடற்கரை

    கொரோனா பரவல் எதிரொலி - மும்பை கடற்கரைகள் 30ம் தேதி வரை மூடல்

    மகாராஷ்டிராவின் மும்பையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மும்பை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அம்மாநில அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 
    இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரங்கு, பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மும்பை மாகராட்சி கமிஷனர் இக்பால் சகால் நேற்று  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் வரும் 30-ம் தேதி வரை மூடவேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை மாநகராட்சி உதவி கமிஷனர்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    அதன்படி, மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் நேற்று மூடப்பட்டன. போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரைகள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்ரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
    Next Story
    ×