என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணையாக உள்ளனர் - பினராயி விஜயன் பேச்சு
Byமாலை மலர்6 April 2021 2:50 PM GMT (Updated: 6 April 2021 2:50 PM GMT)
ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் தங்கள் அரசுக்கு துணையாக உள்ளது என்று கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
கேரளாவில் ஆளும் கட்சியான இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி, காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி அரசுக்கு இந்த தேர்தலில் சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய அனுமதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள இடதுசாரிகள் அரசு கையாண்ட விவகாரம் இத்தேர்தலில் விமர்சனங்களை சந்தித்தது. இந்த விவகாரத்தில் ஐய்யப்ப பக்தர்களின் உணர்வுகளை இடதுசாரிகள் அரசு புண்படுத்திவிட்டதாக இடதுசாரிகள் அரசு மீது காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது. அதேபோல், நாயர் சர்வீஸ் சோசைட்டி தலைவர் சுகுமாரன் என்பவர் பேசுகையில், ஐயப்பனின் கோபம் இடதுசாரிகள் அரசு மீது இருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சுகுமாரன் கருத்துக்கும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். தர்மடம் தொகுதியில் இன்று காலை தனது வாக்கை பதிவு செய்த முதல்மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய பினராயி விஜயன், ஐயப்ப பக்தரான சுகுமாரன் அப்படி சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஐயப்பன் மற்றும் அனைத்து கடவுள்களும் மற்றும் பிற மதநம்பிக்கைகளை பின்பற்றும் மக்களின் கடவுள்களும் இந்த அரசுடன் (இடது ஜனநாயக முன்னணி) துணையாக உள்ளனர். ஏனென்றால் இந்த அரசு மக்களை பாதுகாக்கிறது. மக்களுக்கு நன்மை செய்பவர்களுடன் தான் அனைத்து கடவுள்களும் உள்ளனர். அதைத்தான் நீங்கள் பார்க்கவேண்டும்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X