search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு
    X
    வாக்குப்பதிவு

    புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம், மேற்குவங்காள மாநில 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது

    புதுச்சேரியில் 30 இடங்களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், மேற்குவங்காளத்தில் 3-ம் கட்டமாக 31 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.
    தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

    இன்று தமிழகத்துடன் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    அசாமில் 3-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 31 தொகுதிகளுக்கான 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 

    வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் அதிகாரிகள் வாக்கு எந்திரத்திற்கு சீல்வைத்து, வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×