search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    சிக்கிம் - நேபாளம் எல்லை அருகே 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    சிக்கிம் - நேபாளம் எல்லை அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் மேற்கு வங்காளம், அசாம் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் உணரப்பட்டது.
    புதுடெல்லி:

    சிக்கிம்-நேபாள எல்லைக்கு அருகே இன்று இரவு 8:49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேற்கு வங்காளம், அசாம் மற்றும் பீகாரின் வேறு சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும், நேபாளம் மற்றும் பூடானின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பீகார், அசாம் மற்றும் சிக்கிம் மாநில முதல்-மந்திரிகளிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×