search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஈஸ்டர் தின வாழ்த்து

    ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினம் நேற்று ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது.
    புதுடெல்லி:

    ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினம் நேற்று ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்தவர்கள் இந்த பண்டிகையை கொண்டாடினர்.

    இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஈஸ்டர் வாழ்த்துகளை வெளியிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில் ‘ஈஸ்டர் நல்வாழ்த்துகள். இந்த நாளில் ஏசு கிறிஸ்துவின் புனிதமான போதனைகளை நாம் நினைவுகூர்கிறோம். சமூக அதிகாரத்துக்கு அவர் அளித்த முக்கியத்துவம் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
    Next Story
    ×