என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசாவில் சபாநாயகரை நோக்கி காலணிகள் வீச்சு - பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு
Byமாலை மலர்3 April 2021 10:55 PM GMT (Updated: 3 April 2021 10:55 PM GMT)
ஒடிசா சட்டசபையில் சபாநாயகரை நோக்கி காலணிகள், மைக்ரோபோன்களை வீசியதால் ஏற்பட்ட அமளியால் அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பின்பு, சுரங்க ஊழல் பற்றி காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ஒத்தி வைப்பு தீர்மானம் மற்றும் உறுப்பினர்களின் விவாதம் ஆகியவற்றுக்கு சபாநாயகர் சூர்ய நாராயண் பேட்ரோ அனுமதி மறுத்து விட்டார். சில மசோதாக்களும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன.
இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களான ஜெயநாராயண் மிஸ்ரா, பிஷ்னு பிரசாத் சேதி மற்றும் மோகன் மஜ்ஜி ஆகியோர் சபாநாயகரை நோக்கி காலணிகள், மைக்ரோபோன்கள் மற்றும் காகிதங்கள் உள்ளிட்ட பிற பொருட்களை வீசி எறிந்தனர் என கூறப்படுகிறது.
இதனால், அவர்கள் 3 பேரையும் மீதமுள்ள கூட்டத்தொடரில் பங்கேற்க விடாமல் சஸ்பெண்டு செய்யும்படி காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பின் வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்களை சபாநாயகர் பேட்ரோ ஆய்வு செய்துள்ளார். அதன்பின் 3 எம்.எல்.ஏ.க்களையும் அவர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதன்பின் காலவரையின்றி அவை ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X