search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
    X
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து

    "இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் புனித பண்டிகையான ஈஸ்டரை முன்னிட்டு நமது நாட்டின் மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

    "இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் புனித பண்டிகையான ஈஸ்டரை முன்னிட்டு நமது நாட்டின் மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
    கோப்பு படம்.
    மனித குலத்தின் மீட்பராக வணங்கப்படும் இயேசு கிறிஸ்து, அன்பு, அமைதி, கருணை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் மூலம் மனித இனத்தை ரட்சிப்பதற்கான பாதைக்கு ஒளியூட்டினார்.

    அனைத்து மனிதர்களிடமும் கருணையை காட்டி ஈஸ்டரை நாம் கொண்டாடுவோம். இந்த பண்டிகை நமது வாழ்வில் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×