என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை- மத்திய அரசு விளக்கம்
Byமாலை மலர்3 April 2021 3:23 AM GMT (Updated: 3 April 2021 3:23 AM GMT)
கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
புதுடெல்லி:
இந்தியாவிடம் நேபாளம் கூடுதலாக 50 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகளை கேட்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வெற்றிகரமாக நடந்து வரும் இத்திட்டத்தை உலக நாடுகள் விரும்புகின்றன. இதன்படி, 80-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு 6 கோடியே 44 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசிகளை அனுப்பி உள்ளோம்.
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து விட்டுத்தான் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பப்படும் என்று எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அதை உலக நாடுகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். அதற்காக தடுப்பூசி ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவிடம் நேபாளம் கூடுதலாக 50 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகளை கேட்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வெற்றிகரமாக நடந்து வரும் இத்திட்டத்தை உலக நாடுகள் விரும்புகின்றன. இதன்படி, 80-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு 6 கோடியே 44 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசிகளை அனுப்பி உள்ளோம்.
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து விட்டுத்தான் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பப்படும் என்று எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அதை உலக நாடுகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். அதற்காக தடுப்பூசி ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X