search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்கப்பட்ட கார்
    X
    தாக்கப்பட்ட கார்

    அசாமில் பாஜக வேட்பாளர் காரில் ஓட்டு எந்திரம் கொண்டு சென்ற விவகாரம் - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

    அசாம் மாநிலத்தில் நேற்று இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.
    கவுகாத்தி:

    அசாமில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 39 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இதற்கிடையே, அசாமின் ரதாபரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 149- இந்திரா எம்.வி பள்ளியில் வாக்குப்பதிவு முடிந்ததும்,  வாக்கு இயந்திரங்களை கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்துச்செல்ல பாஜக வேட்பாளரின்  காரை தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    வாக்கு இயந்திரம் பாஜக வேட்பாளரின் காரில் எடுத்துச்செல்லும் தகவலறிந்த எதிர்க்கட்சிகள் காரை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.  

    தேர்தல் ஆணையம்

    வாக்கு இயந்திரம் பாஜக பிரமுகருக்கு சொந்தமானவரின் காரில் எடுத்துச்செல்லப்பட்ட சர்ச்சை குறித்து விளக்கமளித்த தேர்தல் அதிகாரிகள், “கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கு இயந்திரத்தை எடுத்துச்சென்ற கார் பழுதடைந்துவிட்டது. ஆகையால், அவ்வழியாக வந்த காரில் வாக்கு இயந்திரத்தை கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சென்றோம்” என ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது.

    இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க.வை கடுமையாக சாடிய எதிர்க்கட்சிகள், இந்த சம்பவம் வாக்கு இயந்திரத்தைக் கைப்பற்றுதல் என விமர்சித்துள்ளது. அசாமில் பா.ஜ.க. வெல்ல இது மட்டுமே வழி எனவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் கோகாய் சாடியுள்ளார்.

    இந்நிலையில், வாக்கு இயந்திரத்துடன் பா.ஜ.க. வேட்பாளரின் காரில் சென்ற தேர்தல் அதிகாரிகள் 4 பேரை இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியுள்ளது.
    Next Story
    ×