search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 1,288 பேருக்கு தொற்று உறுதி

    ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,04,548 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் அரசு மேற்கொண்ட தீவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருந்தது. ஆனால் தற்போது  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிது.

    இந்த நிலையில் இன்று ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று மேலும் 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,04,548 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஆந்திராவில் இதுவரை 7,225 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 8,815 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 8,88,508 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×