search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத் பவார்
    X
    சரத் பவார்

    மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை- சரத் பவாருக்கு பித்தப்பையில் இருந்த கல் அகற்றம்

    சரத் பவாரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் வயிற்று வலி காரணமாக மும்பையில் உள்ள பிரிஜ்கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு பித்தப்பையில் சிறு கல் இருப்பது கண்டறியப்பட்டது.

    இந்தநிலையில் சரத்பவாருக்கு இன்று அவசரமாக என்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பித்தப்பையில் இருந்த கல் அகற்றப்பட்டது.

    தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×