என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்... பாஸ்போர்ட் தர மறுக்கிறார்கள் -மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
Byமாலை மலர்29 March 2021 8:48 AM GMT (Updated: 29 March 2021 8:48 AM GMT)
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபிறகு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட மெகபூபா முப்தி கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தனக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது தொடர்பாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘சிஐடி அறிக்கையின் அடிப்படையில் எனது பாஸ்போர்ட்டை வழங்க பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்துவிட்டது. சிஐடி அறிக்கையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் வைத்திருக்கும் முன்னாள் முதலமைச்சர், ஒரு வலிமைமிக்க தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்கிறார்கள். இதுதான், ஆகஸ்ட் 2019-க்கு பிறகு காஷ்மீரில் திரும்பிய இயல்பு நிலை’ என மெகபூபா கூறி உள்ளார்.
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் வகையில், நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களுடன் மெகபூபா முப்தியும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X