search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் கூட்டாக இணைந்து பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்த் அங்கு சென்ற பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    இந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×