என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண் கொடுத்த புகாரை கண்டு பயப்பட மாட்டேன்: ரமேஷ் ஜார்கிகோளி
Byமாலை மலர்27 March 2021 2:06 AM GMT (Updated: 27 March 2021 2:06 AM GMT)
எனக்கு எதிராக இளம்பெண் கொடுத்துள்ள புகாரை கண்டு பயப்பட மாட்டேன் என்றும், என்னிடம் உள்ள ஆதாரத்தை இன்று (சனிக்கிழமை) வெளியிடுவேன் என்றும் ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
பெங்களூரு :
கர்நாடக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச சி.டி.யில் இடம் பெற்றுள்ள இளம் பெண், நேற்று தனது வக்கீல் மூலம் பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ரமேஷ் ஜார்கிகோளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனக்கு எதிராக சதி வலை பின்னப்பட்டுள்ளது. இந்த சதியின் கடைசி ஆயுதமாக என் மீது புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய புகார் எனக்கு எதிராக கொடுக்கப்படும் என்று நான் எதிர்பார்த்தேன். அது அப்படியே நடந்துள்ளது. இதற்கு எதிராக நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சட்ட ரீதியாக ஆலோசித்து வருகிறேன். நாளை (அதாவது இன்று) என்னிடம் உள்ள ஆயுதத்தை (ஆதாரத்தை) வெளியிட உள்ளேன். அத்துடன் எங்களின் ஆட்டம் தொடங்கவுள்ளது. அந்த பெண் கொடுத்துள்ள இத்தகைய புகாரை கண்டு நான் பயப்பட மாட்டேன்.
புகார் கொடுத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். ஒரு அரசை வீழ்த்தி புதிய அரசை அமைக்கும் பலம் உள்ளவன் நான். இத்தகைய 10 புகார்கள் வந்தாலும் அதை கண்டு அஞ்ச மாட்டேன். அந்த பெண் புகார் கொடுப்பதாக இருந்தால் முதலிலேயே கொடுத்திருக்க வேண்டும். இப்போது எங்கேயே உட்கார்ந்து புகார் கொடுக்கிறார். நான் எல்லாவற்றையும் எதிர்கொள்ள மனரீதியாக தயாராகியுள்ளேன்.
எனது வக்கீல்களை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தகட்ட முடிவை எடுப்பேன். இந்த விஷயத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை. என்னிடம் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் உள்ளார். இதுபற்றி அவருடன் ஆலோசித்து உள்ளேன். நான் முதலில் புகார் கொடுத்தேன். அதுபற்றி முதலில் போலீசார் விசாரிக்க வேண்டும். நான் தவறு செய்திருந்தால் நானே போலீஸ் நிலையத்திற்கு வர தயாராக உள்ளேன்.
நான் கூட்டணி அரசை கவிழ்த்ததால் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். இந்த சி.டி.யின் பின்னணியில் இருப்பது யார் என்பதை முதல்-மந்திரி, போலீஸ் மந்திரிக்கு தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
கர்நாடக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச சி.டி.யில் இடம் பெற்றுள்ள இளம் பெண், நேற்று தனது வக்கீல் மூலம் பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ரமேஷ் ஜார்கிகோளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனக்கு எதிராக சதி வலை பின்னப்பட்டுள்ளது. இந்த சதியின் கடைசி ஆயுதமாக என் மீது புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய புகார் எனக்கு எதிராக கொடுக்கப்படும் என்று நான் எதிர்பார்த்தேன். அது அப்படியே நடந்துள்ளது. இதற்கு எதிராக நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சட்ட ரீதியாக ஆலோசித்து வருகிறேன். நாளை (அதாவது இன்று) என்னிடம் உள்ள ஆயுதத்தை (ஆதாரத்தை) வெளியிட உள்ளேன். அத்துடன் எங்களின் ஆட்டம் தொடங்கவுள்ளது. அந்த பெண் கொடுத்துள்ள இத்தகைய புகாரை கண்டு நான் பயப்பட மாட்டேன்.
புகார் கொடுத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். ஒரு அரசை வீழ்த்தி புதிய அரசை அமைக்கும் பலம் உள்ளவன் நான். இத்தகைய 10 புகார்கள் வந்தாலும் அதை கண்டு அஞ்ச மாட்டேன். அந்த பெண் புகார் கொடுப்பதாக இருந்தால் முதலிலேயே கொடுத்திருக்க வேண்டும். இப்போது எங்கேயே உட்கார்ந்து புகார் கொடுக்கிறார். நான் எல்லாவற்றையும் எதிர்கொள்ள மனரீதியாக தயாராகியுள்ளேன்.
எனது வக்கீல்களை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தகட்ட முடிவை எடுப்பேன். இந்த விஷயத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை. என்னிடம் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் உள்ளார். இதுபற்றி அவருடன் ஆலோசித்து உள்ளேன். நான் முதலில் புகார் கொடுத்தேன். அதுபற்றி முதலில் போலீசார் விசாரிக்க வேண்டும். நான் தவறு செய்திருந்தால் நானே போலீஸ் நிலையத்திற்கு வர தயாராக உள்ளேன்.
நான் கூட்டணி அரசை கவிழ்த்ததால் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். இந்த சி.டி.யின் பின்னணியில் இருப்பது யார் என்பதை முதல்-மந்திரி, போலீஸ் மந்திரிக்கு தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X