search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இனி ‘சங் பரிவார்’ என அழைக்க மாட்டேன் - ராகுல் காந்தி அறிவிப்பு

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்புடைய இன்ன பிற அமைப்புகளை நான் இனி ‘சங் பரிவார்’ என்று அழைக்க மாட்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்புடைய இன்ன பிற அமைப்புகளை நான் இனி ‘சங் பரிவார்’ என்று அழைக்க மாட்டேன். ஏனென்றால், குடும்பம் என்றால் அதில் பெண்கள் இருப்பார்கள். பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் மதிக்கப்படுவார்கள். அவர்கள் மீது அன்பும், இரக்கமும் இருக்கும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இது எதுவும் இல்லை. எனவே அந்த அமைப்பை இனி ‘சங் பரிவார்’ என அழைக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×